Tuesday, May 19, 2009

எப்பொருள் யார் யார் வாய் கேற்பினும்.....

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொலை செய்யப்பட்டதாக பொய் கூறி
உலகை ஏமாற்றும் இலங்கை ... புட்டு வைத்துள்ளது மக்கள் தொலைக்காட்சியும்....

பிரபாவின் இறந்த உடல்: பல சந்தேகங்கள்
[ செவ்வாய்க்கிழமை, 19 மே 2009, 11:16.45 AM GMT +05:30 ]
பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக அவரைப்போன்று ஒரு உருவ அமைப்புடைய இறந்த உடலை இலங்கை தொலைகாட்சிகளில் ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றது.

இலங்கைத் தொலைக்காட்சியில் காட்டப்பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அதற்கு மேல் முதலாவதாக உள்ள படம் 2004 கார்த்திகை 26 எடுக்கப் பட்டது.

4 வருடங்களுக்கு மேலாகிய பின்பு அவர் 2009 இளமையாகத் தோற்றம் அளிப்பது எப்படி? அந்த படத்தில் 35 தொடக்கம் 40 வயதான தோற்றத்தையே அளிக்கிறது.

முகத்தில் இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லை. 2004ம் ஆண்டு புகைப்படத்தில் அவருக்கு முகத்தில் சுருக்கங்கள் இருந்திருக்கின்றன.

கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மற்றும் அந்த சூழநிலையில் இருந்து கனகச்சிதமாக முகச்சவரம் செய்தி இருப்பாரா என்று பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.

அம்புலன்ஸ் வண்டியில் தப்பி செல்லும் போது சூட்டுக்கு பலியாகியாத அறிவித்த இராணுவம் இன்று மதியம் 12 மணியளவில் முல்லைத்தீவு நந்திக்கடலுக்குள் இருந்து உடலை கண்டு பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.


2004-கார்த்திகை 26 எடுக்கப்பட்டது


இலங்கைத் தொலைக்காட்சியில் காட்டப்பட்ட படம்

Friday, May 15, 2009

லண்டன் தெலிக்ரப் பத்திரிகை விசனம்

டெலிகிராப் பத்திரிகை இலங்கையில் நடக்கும் அழிவு நிறுத்தமுடியாத வெளிநாடுகளின் நடவடிக்கைகளை கண்டித்துள்ளது ..


http://www.telegraph.co.uk/news/worldnews/...-Sri-Lanka.html

Thursday, May 14, 2009

இலங்கையில் ஒபாமா உடனடியா அவலங்களை நிறுத்தும் படி அறிவித்துள்ளார்

Obama calls for urgent action to avoid catastrophe in SL

E-mail Print PDF

President Barack Obama said "urgent action" is needed to keep a humanitarian crisis there from becoming a catastrophe he said he is "increasingly saddened" by continued violence in Sri Lanka.

President Barack Obama has urged Sri Lanka to stop "indiscriminate shelling" of civilians and pressed the Tamil Tiger rebels to surrender to avoid humanitarian catastrophe. "Without urgent action, this humanitarian crisis could turn into a catastrophe," Mr Obama warned.

In his remarks outside the White House, Mr Obama acknowledged that with all the big issues going on, Sri Lanka hasn't received much attention.

He called on Sri Lankan government to take a number of steps to address the strife. He said first the government should stop indiscriminate shelling that has taken hundreds of innocent lives, including several (in) hospitals and live up to its commitment not to use heavy weapons. He said the government should give the United Nations access to suffering civilians in harms way, and give the UN and Red Cross access to nearly 190,000 displaced people in Sri Lanka.

"The United States stands ready to work with the international community to support the people of Sri Lanka in this time of suffering," Obama said. "I don't believe that we can delay. Now is the time for all of us to work."
"Going forward, Sri Lanka must seek a peace that is secure and lasting and grounded in respect for all of its citizens," he said.

"More civilian casualties and inadequate care for those caught in resettlement camps will only make it more difficult to achieve the peace that the people of Sri Lanka deserve."

Dozens of civilians trapped in the conflict zone in northeast Sri Lanka were reported killed in shelling on Wednesday.
Read the full text of the statement:
THE WHITE HOUSE

Office of the Press Secretary
_______________________________________________________
For Immediate Release May 13, 2009

STATEMENT BY THE PRESIDENT
ON THE SITUATION IN SRI LANKA
AND DETAINEE PHOTOGRAPHS

South Drive

4:12 P.M. EDT

THE PRESIDENT: Hello, everybody. Sorry to keep you guys waiting. Good to see you. I want to take a few moments at the top to talk about something that, with all the big issues going on, hasn't received much attention, but I think is worth talking about briefly.

As some of you know, we have a humanitarian crisis that's taking place in Sri Lanka, and I've been increasingly saddened by the desperate news in recent days. Tens of thousands of innocent civilians are trapped between the warring government forces and the Tamil Tigers in Sri Lanka with no means of escape, little access to food, water, shelter and medicine. This has led to widespread suffering and the loss of hundreds if not thousands of lives.

Without urgent action, this humanitarian crisis could turn into a catastrophe. Now is the time, I believe, to put aside some of the political issues that are involved and to put the lives of the men and women and children who are innocently caught in the crossfire, to put them first.

So I urge the Tamil Tigers to lay down their arms and let civilians go. Their forced recruitment of civilians and their use of civilians as human shields is deplorable. These tactics will only serve to alienate all those who carry them out.

I'm also calling on the Sri Lankan government to take several steps to alleviate this humanitarian crisis. First, the government should stop the indiscriminate shelling that has taken hundreds of innocent lives, including several hospitals, and the government should live up to its commitment to not use heavy weapons in the conflict zone.

Second, the government should give United Nations humanitarian teams access to the civilians who are trapped between the warring parties so that they can receive the immediate assistance necessary to save lives.

Third, the government should also allow the United Nations and the International Committee of the Red Cross access to nearly 190,000 displaced people within Sri Lanka so that they can receive additional support that they need.

The United States stands ready to work with the international community to support the people of Sri Lanka in this time of suffering. I don't believe that we can delay. Now is the time for all of us to work together to avert further humanitarian suffering.

Going forward, Sri Lanka must seek a peace that is secure and lasting, and grounded in respect for all of its citizens. More civilian casualties and inadequate care for those caught in resettlement camps will only make it more difficult to achieve the peace that the people of Sri Lanka deserve.
News edited by Tamilnational [ editor@tamilnational.comThis e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it ]

Wednesday, May 13, 2009

வன்னியில் இரத்தவெள்ள ஆபத்து இந்திய தேர்தல் முடிவிற்கு பின்

இன்றைய தேர்தலுக்கு பின் 'Bloodbath' மிகப் பெரிய பேரவல வெள்ளமாக பெருக்கெடுக்கும் அபாயம் உள்ளதென பொதுவான பயம் எங்கும் நிறைந்து காணப்படுகிறது. பாதுகாப்புச்சபை உடனடியாகத் தலையிட்டு போரை நிறுத்த வேண்டும் என உலக மன்னிப்புச் சபை கேட்டுள்ளது.

இதே நேரம் இலங்கையிலிருந்து வரும் செய்திகளிலிருந்து இந்திய தேர்த்தல் முடிவு வெளிவர முன்னர் விரைந்து போரை முன்னெடுத்து அடுத்த 48 மணித்தியாலத்தினுள் பாதுகாப்பு வலயத்தை முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டு வர இலங்கையும் முடிவெடுத்துள்ளதாம்.
Source: Fear of 'bloodbath' turning into flood of misery after today, AI calls Security Council to act இம்மேடியாடேலி

Tuesday, May 12, 2009

தலையீடு ஈழதமிழர் நிலைமையில் சி என் என் வாக்கெடுப்பு

CNN கருத்துக்கணிப்பு ஒவ்வொரு தமிழரும் கட்டாயம் வாக்களியுங்கள்
பிரசுரித்த திகதி : 11 May 2009
பிரபல அமெரிக்க தொலைக்காட்சியின் இணையத்தளமான CNN கருத்துக்கணிப்பு ஒவ்வொரு தமிழரும் வாக்களியுங்கள்

மேலும் வாசிக்க

Monday, May 11, 2009

இலங்கையின் இன அழிப்பின் உச்சக்கட்டம் வீடியோ ..

BREAKING NEWS
இன்று நடைபெற்ற அகோரத் தாக்குதலின் வீடியோ காட்சிகள் (இணைப்பு 4)
பிரசுரித்த திகதி : 10 May 2009
இன்று நடைபெற்ற அகோரத் தாக்குதலில் வீடியோ காட்சிகள் நடைபெற்ற நாள் ஆதாரத்துடன் வெளியிடப்பட்டுள்ளன

மேலும் வாசிக்க
இடுகையை வெளியிடு

Sunday, May 10, 2009

2000 இற்கும் அதிகமான மக்கள் வன்னியில் பாதுகாப்பு வலையத்தில் படுகொலை சனி இரவு

10/05/2009, 08:55 மணி தமிழீழம் [சுடர்நிலா]
பாதுகாப்பு வலயமானது கொலை வலையமானது – ஒரே இரவில் 2000க்கும் மேற்பட்டோர் பலி

சனிக்கிழமை இரவு முதல் ஞாயிறு காலை வரை நடந்த சிறிலங்கா இராணுவத்தின் மக்கள்மீதான தாக்குதலில் 2000க்கும் மேற்பட்ட அப்பாவிப்பொது மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக வன்னி மருத்துவ வட்டாரங்களில் இருந்து வந்த செய்தியில் தெரியவருகிறது.

பலதரப்பட்ட, தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பாவித்து மக்கள் வலயத்துக்குள் தொடர்ந்து நடாத்திய கண்மூடித்தனமான தாக்குதலால் சடலங்கள் எங்கும் பரவிக்கிடப்பதாகவும் இதில் 814 பேர் வரையில் வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டதாகவும், வார்த்தையில் சொல்லிவிடமுடியாத அவலத்தை சாமாளிக்கமுடியாமல் தாம் உள்ளதாகவும் முள்ளிவாய்க்கால் பாடசாலையில் இயங்கும் தற்காலிக வைத்தியசாலையின் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அனைத்துலக சமுதாயத்தின் கவனிப்பைக்குறைப்பதற்காக சிறிலங்கா இராணுவமானது தனது கூட்டுக்கொலைகளை விடுமுறை நாட்களில் அரங்கேற்றுவது வழமை.

Saturday, May 09, 2009

இரசாயன ஆயுதங்கள் தொடர்ந்து இராணுவத்தால் பாவிக்கப்படுகிறது..

http://www.nowpublic.com/world/sri-lankan-...amils-war-zones
நவ் பப்ளிக் இல் இராணுவ இரசாயன பிரயோகங்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது

மூன்று ஆங்கில நாட்டு ஊடகவியளார்கள் இலங்கையில் கைது...

http://www.tamilnational.com

Three London Channel 4 journalists to be deported; 'Media Freedom' nice two words
Saturday, 09 May 2009 17:29 administrator
E-mail Print PDF

[File Video] Sri Lankan police arrested three journalists for London-based Channel 4 television news Saturday on charges of tarnishing the image of government security forces, authorities said.

Police spokesman Ranjith Gunasekera said the trio were arrested in the eastern city of Trincomalee on Saturday. He said investigations are continuing.

Nick Paton-Walsh, the channel's Asian correspondent, spoke to the Associated Press by telephone shortly after the arrest, saying that he was being driven to the capital Colombo, along with producer Bessie Du and cameraman Matt Jasper.

The Channel 4 had been covering fierce fighting between government forces and the separatist Tamil Tigers.

Walsh said he believed the arrests were connected to his recent report on conditions for war refugees and alleged sexual abuse in camps for those who fled the northern war zone.

ITN News, which produces Channel 4, confirmed that its reporting team has been ordered to leave the country by the Sri Lankan Defense Minister, "after reporting allegations of abuse and ill-treatment of Tamils held in internment camps."

"Their original report, broadcast on Channel 4 News on 5th May, contained the first independently filmed video from one of the internment camps in the city of Vavuniya in the north of Sri Lanka," ITN said in a statement. "The report contained claims that dead bodies were left where they fell, shortages of food and water, and sexual abuse."

ITN said it would seek an explanation from the Sri Lankan government for the decision to expel the journalists.

The government has denied the Channel 4 report.

In recent weeks, the government and aid groups have been struggling to cope with more than 120,000 civilians who fled the war zone, overwhelming displacement camps.

Media rights group have accused the government of carrying out a ruthless campaign against the media and dissidents amid the military's recent successes against rebels.

Journalists are still largely banned from the northern war zone, making it difficult for independent journalists to verify either government or rebel reports of the conflict. The government argues the area is too dangerous for noncombatants.

The government also has come under heavy criticism for a spate of attacks on and arrests of journalists viewed as critical of the offensive against the rebels. The government denies any hand in the suppression of journalists.

According to Amnesty International, at least 14 journalists and Sri Lankans working for media organizations have been killed since the beginning of 2006. Others have been detained, tortured or have disappeared. Amnesty says 20 more have fled the country because of death threats.

Friday, Senior Emergencies Researcher Dr Anna Neistat at Human Rights Watch (HRW), was banned from entering Sri Lanka and few weeks back Jeremy Page from London based 'The Times' was locked in the airport on arrival and was deported the following day.

That is media freedom in Sri Lanka, nice two words.

Friday, May 08, 2009

பாதுகாப்பு வலையத்தில் உடன் கண்காணிப்பு தேவை

"Urgent international scrutiny needed in SL," UN rights experts
www.tamilnational.com

"Urgent international scrutiny needed in SL," UN rights experts

A group of independent United Nations experts Friday called on the Human Rights Council to urgently set up an international inquiry to address the “critical” situation in Sri Lanka amid fighting betwe...
Situation Report [May08]: Shells explode among civilians waiting for food, more than 100 killed today

ஈழத் தமிழ் வாலிபரின் கண்கலங்க வைக்கும் நிகழ்ச்சி ..

http://www.youtube.com/watch?v=5rB-atZH_-ய
[மேலும்]

Friday, May 01, 2009

மக்களுக்கு நடக்கும் பயங்கரம் பாருங்கள் செயல்படுங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=௫௭௩௭௭



இலங்கை இராணுவத்தினரால் கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிள்ளைகளுடன் சென்ற மக்களின் அவல நிலையை பாருங்கள்.



பெற்றோர்கள் ஒரு மரத்தைச் சுற்றி முட்கம்பிகளால் அடைக்கப்பட்டும் அவர்களின் பிள்ளைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வேறு ஒரு முகாமிற்கு கொண்டுசெல்ல இராணுவம் தயாராகி வரும் நிலையை நன்கு விளக்கும் இந்த புகைப்படம்.

இனி தங்கள் பெற்றோரை தாம் பார்ப்போமா ? என்ற அச்சத்துடன் பிள்ளைகள், பிறிதொரு முகாமுக்கு செல்ல தயாராகின்றனர். கடைசியாக தங்கள் பெற்றோருக்கு கையசைத்து விடைபெறுகின்றனர். இவர்களின் உள நிலை எப்படி இருக்கும் என கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.

இவர்களது பெற்றோருக்கு என்ன நிகழப்போகிறது என எவராலும் கூறமுடியுமா ? அல்லது உத்தரவாதம் தான் தர முடியுமா ? . இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருப்பது இன அழிப்பு என்பதற்கு இதற்கு மேலும் ஒரு சாட்சியம் வேண்டுமா ? இராணுவத்தின் கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட இப் புகைப்படம் தற்செயலாக அவரின் நன்பர் ஒருவர் பார்த்ததால் அதனை அவர் இரகசியமாக பிரதி எடுத்து வெளியிட்டுள்ளார். இல்லையேல் இங்கு நடக்கும் அக்கிரமங்களுக்கு சாட்சி இல்லை.

புலம் பெயர் தமிழர்களே இப்படத்தை பிரதி எடுத்து உங்கள் கண்டனங்களையும் இணைத்து உங்களது தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்புங்கள், அல்லது நேரில் சென்று முறையிடுங்கள், மனித நாகரீகமே கண்டறியாத துயரங்களை அனுபவித்துவரும் எமது தமிழினத்திற்கு ஒரு விடிவை தேடித்தாருங்கள். யார் மண்ணில் யாரை முற்கம்பிகளால் அடைப்பது.

Thursday, April 30, 2009

'மோதல் தவிர்ப்பு பிரதேசம்" என ஒன்று தற்போது இல்லை. கனரக ஆயுதங்களின் மோதல் தளமாகவே அது காணப்படுகிறது.- ஜோன் ஹோம்ஸ் [ வியாழக்கிழமை, 30 ஏப்ரல் 2009, 04:

'மோதல் தவிர்ப்பு பிரதேசம்" என ஒன்று தற்போது இல்லை. கனரக ஆயுதங்களின் மோதல் தளமாகவே அது காணப்படுகிறது.- ஜோன் ஹோம்ஸ்
[ வியாழக்கிழமை, 30 ஏப்ரல் 2009, 04:47.54 AM GMT +05:30 ]
மோதல் பிரதேசங்களில் உள்ள பல்லாரக்கணக்கான பொது மக்கள் உயரிய ஆபத்தினை எதிர்நோக்கியுள்ளனர் அவர்களை வெளியேற்ற அரசாங்கம் துரிதமான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் இதன் பொருட்டு மனிதாபிமான யுத்த இடைநிறுத்ததினையும் அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள பொது மக்கள் பாரிய ஆபத்தில் சிக்கியுள்ளனர் எனவும் அவர்கள் எறிகனைகள் மற்றும் துப்பாக்கி பிரயோகங்களினால் மாத்திரம் இன்றி உணவு மற்றும் இதர அத்தியாவசிய வசதிகள் இல்லாததன் காரணமாகவும் பாதிப்படைவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான உதவி செயலர் ஜோன் ஹோம்ஸ் நேற்று நியோர்க் நகரில் வைத்து செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

தற்போது பாதுகாப்பு வலயம் அல்லது மோதல் தவிர்ப்பு பிரதேசம் என்று ஒன்று அங்;கு இல்லை அது கனரக ஆயுதங்களின் தாக்குதல் இடம்பெறும் தளமாகவே காணப்படுவதாக ஜோன் ஹோம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜோன் ஹோம்ஸ் இலங்கைக்கு விஜயம் செய்து ஜனாதிபதி உள்ளிட்ட முக்கியஸ்த்தர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டதுடன் வவுனியா முகாம்களுக்கு சென்று நேரடியா பார்வையி;ட்டதன் பின்னர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் யுத்த நிறுத்தம் ஒன்றினை முன்வைத்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டு எழுந்து விடுவர் என்ற அச்சத்தில் அந்த அறிவிப்பை பற்றி சிந்திக்காமலே இருக்கிறது.

அரசாங்கத்துடன் யுத்த நிறுத்தம் குறித்த இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமையிட்டு வருவத்தமடைவதாகவும் எனினும் மோதல் பிரதேசங்களில் உள்ள பொது மக்களின் பாதுகாப்பின் பொருட்டும் அவர்களுக்கான மனிதாபிமான நடவடிக்கைகளை விநியோகிக்கும் பொருட்டும் தொடர்ந்தும் யுத்த நிறுத்தம் ஒன்றினை ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தும் என ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மோதல் பிரதேசத்தில் கடந்த வாரம் அரசாங்கம் அறிவித்தை போல கனரக ஆயுதங்களை பாவிக்க கூடாது என்பது மிகவும் முக்கியமாக விடயம் என ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் இந்த உறுதி மொழி தொடர்ந்தும் கடைபிடிக்கப்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

துரதிஷ்ட்ட வசமாக இருத்தரப்பினரும் இராணுவ நடவடிக்கையினை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். இதன் காரணமாகவே இவ்வாறானதொரு நெருக்கடியான நிலை தோன்றியுள்ளது. என ஜோன் ஹோம்ஸ் இதன் போது சுட்டிக்காட்டினார்.

Tuesday, April 28, 2009

தமிழர்களின் சாவில் சதிராடும் சர்வதேசம் இனி நடக்கப்போவது என்ன?

27/04/2009, 14:32 [ நிலாமகன்]
தமிழர்களின் சாவில் சதிராடும் சர்வதேசம் இனி நடக்கப்போவது என்ன?

உலகின் மனச்சாட்சியை உலுக்கும் வன்னிக் களம் இன்னும் தமிழர்களின் குருதிக் குழம்பில் கொதித்துக் கிடக்கின்றது.

எவருடைய ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் ஏன் அச்சுறுத்தல்களையும் கூட செவிமடுக்க இலங்கையின் அதிகார பீடம் விரும்பவில்லை.

மிகக் கடினமான தமது யுத்த முன்னெடுப்பை உலக அழுத்தங்களுக்கு அடிபணியாமல் ராஜபக்ச சகோதரார்கள் முன்னெடுத்து வருகின்றார்கள்.

மூன்று தசாப்பத கால விடுதலைப் போர் அதன் இறுதி தறுவாயில் என்று உலகம் பேசிக்கொள்கின்றது.

இன்னும் வன்னியில் மிச்சமிருக்கும் தமிழர்களையும் மீட்டுவிட்டால் புலிகளின் கதை முடிந்து விடும் என்பது இலங்கை இராணுவ தளபதியின் எதிர்பார்ப்பு.இப்போது இன்னும் 15000 பேர் மட்டுமே பாதூப்பு வலயத்தில் எஞ்சியுள்ளதாக படைத்தரப்பு அறிவித்துள்ளது.

பாதுகாப்பு வலயம் மீதான தாக்குதலை தொடர்ந்து அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்தவர்கள் தொடர்பில் அரச பரப்புரை தரப்புகள் முரண்பாடான தகவல்களையே தொடர்ந்து வழங்கி வருகின்றன.

முன்னர் 70000 ற்கும் குறைவான மக்களே பாதுகாப்பு வலயத்தில் வாழ்வதாக ஸ்ரீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பல தடவைகள் கூறியிருந்தார் எனினும் பாதுகாப்பு வலயம் மீதாக தாக்குதலை அடுத்து இதுவரை ஒரு இலட்சம் பேர் வரை மீட்கப்பட்டதாக பாதுகாப்பு தரப்பு கூறுகின்றது.

ஆனால் இந்த முரண்பாடுகள் குறித்து கேள்வி எழுப்புவதற்கு இலங்கையின் ஊடகங்கள் எவற்றாலும் முடிவதில்லை ,அவற்றின் எதிர்கால இருப்பு மற்றும் பாதுகாப்பு நலன் கருதி அவை இலங்கையின் ஊடக தர்மத்தை கடைப்பிடிக்கின்றன.

பாதுகாப்பு வலயம் புதுமாத்தளனுக்கு வடக்காகவும் தெற்காவும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.வடக்கு பகுதி முழுமையாக படையினரின் வசம் கொண்டு வரப்பட்டுள்ளது தென் பகுதியில் இன்றும் இரண்டு இலட்சம் வரையான பொதுமக்கள் தங்கியுள்ளனர்.

இப்போதும் அரசாங்கம் சில ஆயிரம் பேர் வரையே மீட்கப்படாத பாதுகாப்பு வலயத்தில் இருப்பதாக கூறுகின்றது ஆனால் இது உண்மையல்ல என்பது சர்வதேசத்திற்கு தெரியும் ஆனாலும் அவர்களால் எதுவும் செய்ய முடியாத நிலை தான் தற்போது தோன்றியுள்ளது.

புலிகள் மக்களை மனிதக் கேடயங்காளக வைத்துள்ளார்கள் என்ற பலமான கோசங்கள் இப்போது எழுந்துள்ளன,ஆனால் உண்மையான கள நிலவரம் அதுவல்ல என்கின்றனர் அங்கிருந்து வருகை தந்தவர்கள் அது உண்மையாக இருப்பதற்கு சாத்தியங்கள் பல உள்ளன.

அரசாங்கம் கூறுவது போல் புலிகள் முற்றாக பலமிழந்து விட்டதான கூற்றை ஏற்க முடியாத நிலையே காணப்படுவதாக படைத்துறை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்

இங்கே நாங்கள் இங்கே கூறும் போது செத்துப் போன புலிகளுக்கு ஒக்சிஜன் கொடுக்க முனைவதாகவும் புலம் பெயர் புலி ஆதரவாளர்களை திருப்திப்படுத்த முயல்வதாகவும் கருத்துக் கூறிகள் பதிவிடுவார்கள்,அவர்களுக்கு அவர்களுக்கு புரியும் படி பதில் கூறுவதற்கு என்னை விடவும் அவர்களுக்கு பிடித்த தலைவர்களின் ஒருவரான கருணா பொருத்தமானவர் என்றே நான் கருதுகின்றேன்

அண்மையில் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அல்லது கருணா தெரிவித்துள்ள கருத்து மிகவும் ஆழமாக கவனிக்கப்பட வேண்டியது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பாதுகாப்பு வலயத்திற்கு வெளியில் உள்ள பகுதியிலேயே மறைந்திருப்பார் என்றும் மன்னார் கிளிநொச்சி மற்றும் முல்லைத் தீவு போன்ற பகுதிகளில் உள்ள அடர்ந்த காடுகனில் அவர் தங்கியிருப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது இராணுவ தளபதியின் விடுதலைப் புலிகளின் தலைவர் பாதுகாப்பு வலயத்தில் வாழ்வதான கூற்றுக்கு சவாலானது.

அப்படியானால் இராணுவம் மீட்ட பகுதிகளான அறிவிக்கப்பட்ட மன்னார் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு போன்றவை மீண்டும் புலிகள் வசமாகிவிட்டதா என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகின்றது அல்லது புலிகள் தமது முக்கிய படைகளையும் இராணுவ தளபாடங்களையும் வைத்துள்ள பகுதிகள் இன்னும் இராணுவத்தால் மீட்கப்பட்டிருக்கவில்லை என்பது உண்மையாகிவிடுகின்றது.

இவை மன்னார் கிளிநொச்சி மணலாறு என பரந்து விரிந்த நேரடி நிலத் தொடர்பற்ற பிரதேசங்களாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனை உறுதி செய்ய முடியாத போதிலும் புலிகளின் அடி நுனி தெரிந்த கருணாவின் கூற்றின் மூலம் சில விடயங்களை ஊகிக்க முடியிகின்றது.

அவை புலிகளிடம் இன்னும் அழிக்கப்படாத வளங்களும் வலுவும் இருக்கின்றது அவை பாதுகாப்பு வலயத்திற்கு வெளியில் காண்படுகின்றன.இவற்றை புலிகள் பயன்படுத்தாமல் பாதுகாப்பதற்கு பின்னணியில் மிகப்பெரிய சூட்சுமம் ஒன்று இருக்கின்து போன்றனவாகும்

இராஜதந்திர நல்களை கருதி புலிகள் கடைப்பிடிக்கும் ஊடக மௌனத்தின் சாதகங்களை அரசாங்கம் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு இணையப்பரப்பில் இலங்கை வரைபடத்தின் அனைத்து பகுதிகளிலும் சிங்க கொடிகளை பறக்க விட்டு சிங்கள தேசத்தை திருப்திப்படுத்துகின்றதாக என்ற கேள்வி எழுவதும் தவிர்க்க முடியாததாகின்றது

புலிகள் ஆனந்தபுரத்தில் தான் மிக மோசமான இழப்பை சந்தித்துள்ளனர் அது தளபதிகள் மற்றும் போராளிகள் என பின்னடைவை ஏற்படுத்தக் கூடிய இழப்பு என்பது மறுப்பதற்கல்ல ஆனால் இதுவரை நடைபெற்ற போரில் ஏற்பட்ட இழப்புகள் என்பது புலிகளின் மொத்த படைப்பலத்தைவிட குறைவானது என்பதே தெற்காசிய பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த ஆய்வு சஞ்சிகையின் கருத்தாக இருக்கின்றனது.

முறியடிப்பு சமர்கள் மற்றும் வழிமறிப்பு சமர்கள் ஊடறுப்பு தாக்குதல்கள் என மரபு சாரா பேர் முறைகளை தான் புலிகள் இதுவரை வன்னி கள முனையில் பயன்படுத்தி வருகின்றனர்.

இராணுவம் புலிகளிடம் இருந்து கைப்பற்றியதாக பட்டியலிடும் ஆயுதத் தொகுதிகள் குறித்தும் சர்வதேச ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.

புலிகளின் பலமான தாக்குதல் அணிகள் மற்றும் அதிநவீன ஆயுதங்கள் எவையும் இன்னும் கள முனைக்கு நகர்த்ப்படாதமை குறித்து அரசாங்கத்தின் பாதுகாப்பு தரப்பே சந்தேகம் கொண்டுள்ளது.

மூன்று தசாப்தகால் வளர்ச்சியில் புலிகளின் பலமான ஆயத வலையமைப்பின் மூலம் வன்னிக்கு தருவிக்கபட்ட ஆயுதங்கள் எவற்றையும் படைத்தரப்பால் இதுவரை கைப்பற்ற முடியவில்லை மாறாக புலிகளிடம் இருந்து மீட்டதாக அறிவித்தவை அனைத்தும் இராணுவத்திடம் இருந்து புலிகள் கைப்பற்றியவை என்பதும் கவனிக்கத்தக்கது.

ஸ்ரீலங்கா அரசாங்கம் காட்டம் ஆயதங்கள் அனைத்தும் புலிகளிடம் இருந்து மீட்கப்படடதா அல்லது அரசாங்கம் தமது ஆயுதங்களையே காட்சிப்டுத்தி தென்பகுதி மக்களை திருப்பதி படுத்த முனைகின்றதா என்ற சந்தேகம் எழுவதும் தவிர்க்க முடியாததாகின்றது.

புலிகளின் பலம் குறைவடைந்து விட்டதை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அவர்கள் சில பின்னடைவுகளை சந்தித்திருந்தாலும் அவர்களின் பலத்தை முற்றாக தமது படை நடவடிக்கைகள் மூலம் அழிக்க முடியாது என்றும் வன்னி களமுனைகளில் உள்ள கட்டளை தளபதி வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவருக்கு நெரடியாக தெரிவித்துள்ளார்

தமக்கும் தமது படை அதிகாரிகளுக்கும் புலிகளின் இந்த பின்வாங்கல்,மற்றும் பின்னடைவுகள் குறித்து அச்சம் கலந்த சந்தேகம் நிலவுவதாக அவர் கூறியுள்ளார் புலிகளின் இந்த நகர்வுகள் நிச்சயம் பாரதூரமான பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று தாங்கள் கருதுவதாகவும் ஆனாலும் யுத்தத்தின் வெற்றி என்ற வகையில் தமது கடமையை தாங்கள் சரிவர செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

அரசாங்கம் குறிப்பிடுவது போல் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கை இந்தியாவிற்கு கூட இல்லை.

தமது தலைவரை பழிதீர்க்கும் முகமாக பிரபாகரனை கைது செய்து அவருக்கு தண்டனை வழங்கி ஆறுதல் தேடும் நோக்கிலேயே இந்திய மத்திய அரசு தனது இராணுவ ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்கி வருவதாக இந்திய கொள்கை வகுப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்

ஆசிய பிராந்திய வல்லரச நிலையை எய்தும் இந்தியாவின் நலன்களுக்கு இந்த குறுகிய அரசியல் நலன் சார்ந்த நடவடிக்கைகள் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்

இதேவேளை விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு இலங்கையில் முற்றாக துடைத்தழிக்கப்படுவதை அமெரிக்கா ஒருபோதும் விரும்பாது என்பதை மேற்குலகின் போக்குகளை புரிந்து கொண்டவர்களால் எளிதாக விளங்கிக் கொள்ள முடியும்.

விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்படால் இலங்கை சீனாவினதும் ரஸ்யாவினதும் கைப்பொம்மையாகிவிடும் இது தெற்காசியாவில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க விருப்பிற்கு முரணாகிவிடும்.

அதனை அண்மைக்கால மேற்குல போக்குகள் மூலம் நாங்கள் தெளிவாக உணர முடியும்.

இலங்கை அரசாங்கம் யுத்த நிறுத்தம் ஒன்றை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் வலியுறுத்தல் மிக முக்கியமானது.

இதன் தொடர்ச்சியாக இலங்கையின் சரிந்து போயுள்ள பொருளாதாரத்தை தாங்கும் வல்லமை கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகைக்கு அமெரிக்கா முட்டுக்கட்டை போட்டுள்ளது.

இது குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரோபேர்ட் பிளேக் இலங்கையின் முக்கிய அமைச்சர் ஒருவருக்கு நேரடியாகவே எச்சரிக்கை விடுத்துள்ளதாக விமல் வீரவன்ச கூறியுள்ளார் இதனை அமெரிக்க தூதுவரால் நிராகரிக்க முடியாது என்று அவர் சாவல் விடுத்துள்ளதன் மூலம் அமெரிக்காவின் நகர்வு உறுதிப்படுத்தப்படுகின்றது.

இதன் மூலம் அமெரி;க்கா புலிகளுக்கு ஆதரவளித்து யுத்தத்தின் போக்கை மாற்றி விடும் என்றோ அல்லது தமிழீழ தனியரசுக்கு தார்மீக ஆதரவை வழங்கி விடும் என்றோ எவரும் தவறாக அனுமானிக்க முடியாது.

இது முற்றிலும் அமெரிக்க நலன் சார்ந்த விடயமாக மட்டுமே நோக்கப்பட வேண்டம் ஆனால் அதில் தமிழர்களின் நலன்களின் ஒரு பகுதி உள்ளடங்கி கிடக்கின்றது.

புலிகள் இராணுவ ரீதியாக பலத்த பின்னடைவுகளை நிலப்பரப்புகளையும் முக்கிய சில தளபதிகளையும் இழந்தமை மூலம் சந்தித்துள்ள போதிலும் அவர்களின் தமிழீழ தனியரசுக்கான பொராட்டம் தெளிவான திசையில் வெற்றிகரமான பாதையில் போய் கொண்டிருக்கின்றது என்பதை அனைத்து தரப்பினரும் தெளிவாக உணர வேண்டும்.

இதுவரை இலங்கைக்குள் மட்டுப்படுத்தப்பட்ட தமிழர்களின் விடுதலைப் போராட்டம் தமிழர் வாழும் தேசமெங்கும் எதிரொலிக்கின்றது.

ஆறு கோடி தமிழர்கள் வாழும் இவ்வுலகில் அவர்களுக்கான ஒரு நாடு இல்லை என்கின்ற ஏக்கம் ஒவ்வொரு தமிழனின் அடிமனதிலும் ஆழ பதியவைக்கப்பட்டுள்ளது.

இதுவைர தார்மீக ஆதரவு வழங்கி வந்த தமிழகம் இப்போது முழு அளவில் தமிழீழ ஆதரவுப் போக்கை வெளிப்படுத்தி நிற்கின்றது.

சுயலாப அரசியில் வியாபாரிகளின் கோமளித்தனங்களை அகற்றி விட்டு பார்த்தால் தமிழகத்தில் தோன்றியுள்ள பேரெழுச்சி இந்தியாவையே அசைக்கும் என்பது உறுதி.

அது தவிரவும் புலம் பெயர் நாடுகளில் நடைபெற்றுவரும் தொடர் போராட்டங்கள் உண்ணா நோன்புகள் என்பன தமிழர்களின் அவலங்கள் குறித்து உலகின் கவனத்தை திருப்பியுள்ளன.

இவற்றின் விளைவால் எதிர்வரும் 29ம் திகதி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இலங்கை விவகாரம் குறித்து முதல் தடவையாக ஆராயப்படவுள்ளது.

இது மிக முக்கியமான ஒரு நிகழ்வு இதனை தடுப்பதற்கு இலங்கை அரசும் அதன் சார்பு நாடுகளும் கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டுள்ளன.

உத்தியோக பூர்வமற்ற முறையில் இலங்கை விவாகரம் குறித்து ஐநாவின் பாதுகாப்பு சபை ஆராய்ந்துள்ளது எனினும் அதனை பாதுகாப்பு சபையின் உத்தியோக பூர்வ விவாதத்திற்கு எடுப்பதற்கு வழமை போலவே சீனா ரஸ்யா ஆகிய நாடுகள் தடை செய்துள்ளன.

இலங்கைக்கு விஜம் செய்த ஐநாவின் செயலளர் நாயகத்தின் பிரதிநிதி விஜய் நம்பியார் தனது விஜயம் குறித்து பாதுகாப்பு சபையின் 15 உறுப்பு நாடுகளுக்கும் விளக்கமளித்துள்ளார்

முன்னர் அது தனது தனிப்பிட்ட விடயம் என்று மறுப்பு தெரிவித்த விஜய் நம்பியார் தனது முடிவை மாற்றி பாதுகாப்பு சபை நாடுகளுக்கு விளக்கமளித்துள்மை கவனிக்கப்பட வேண்டிய முக்கிய மான மாற்றம்

இந்த விவாதத்தின் முடிவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தக் கூடாது, ஐநாவின் கண்காணிப்பாளர்கள் பாதுகாப்பு வலயங்களுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பது போன்ற நாங்கள் கேட்டு சலித்த விடயங்கள் தான் முதன்மைப் படுத்தப்படும்.

பொதுவாக ஐநாவின் பாதுகாப்பு சபையில் விவாதம் நடத்தப்படுவது இரு நாடுகளுக்குகிடையிலான பாதுகாப்பு விவகாரங்கள் குறித்தாகவே அமையும் எனவே இலங்கை விவாகரம் பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்லப்படுவது மிகவும் முக்கியத்துவம் மிக்கதாக அமையும்.

ஐநாவின் கண்காணிப்பை இலங்கையில் ஏற்படுத்துவது பாராதூரமான விளைவுகளை இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்படுத்தும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது இது சீனா ரஸ்யா போன்ற நாடுகளின் இலங்கையை தளமாக கொண்ட எதிர் கால செயல்பாடுகளுக்கும் பாதகாமாக அமையும்.

இதன் காரணமாகவே இலங்கையின் பிரச்சினையை சர்வதேச தலையீடுகள் இன்றி இராணுவ ரீதியில் முடித்து வைக்க சீனாவும் ரஸ்யாவும் முனைகின்றன.

இது சாத்தியமாகும் பட்சத்தில் அமெரிக்கா தனது தெற்காசிய மீதான பிடிமானத்தை முற்றாக இழக்க நேரிடும் இதனை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்பதால் சிங்கள தேசியவாதிகள் கூறுவது போல் விடுதலைப் புலிகள் தோல்வி அடைய அமெரிக்கா அனுமதிக்காது என்பது உண்மை அது நிச்சயமாக தமிழர்கள் மீதோ விடுதலைப்புலிகள் மீதோ அமெரிக்கா கொண்டுள்ள அக்கறையின் வெளிப்பாடு என்று எவரும் கருதிவிடலாகாது.

இது நிச்சயம் தனது வல்லரசுக்கான நிலையை தக்கவைப்பதற்கான அமெரிக்காவின் உபாயம் அதனை புலிகள் தமக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ளார்கள் என்பது வெளிப்படை உண்மை.

ஐநாவின் கண்காணிப்பில் மக்கள் வெளியேற்றப்படுவதாக இருந்தால் ஐநாவின் கண்காணிப்பாளர்களை இலங்கை அரசாங்கம் வன்னிக்குள் அனுமதிக்க வேண்டும் அவ்வாறு இலங்கை அரசாங்கம் அனுமதித்தால் அது இதுவைர புரிந்த போர்க் குற்றங்கள் அம்பலத்திற்கு வந்து விடும்.

அனுமதிக்க மறுத்தால் சர்வதேச ரீதியில் அழுத்தங்களை எதிர் நோக்க வேண்டிய நிலை ஏற்படும் ஆக மொத்தம் இலங்கை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள மனிதக் கேடய விவகாரம் அதற்கே பிரச்சினையாக மாறப் போகின்றது.

இதனை தடுப்பதற்கும் இலங்கையில் தமது மேலாதிக்கத்தை ஏற்படுத்தவும் சீனாவும் ரஸ்யாவும் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன.

பாதுகாப்பு சபையில் இலங்கை விவகாரத்தை கொண்டு வரமால் தடுக்க இவை எடுக்கும் முயற்சிகள் மேற்குலகத்திற்கு மேலும் மேலும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.

தற்போதைய வெளிப்படையான கள நிலமைகள் விடுதலைப் புலிகளுக்கு பாதகமாகவே இருக்கும் நிலையில் இலங்கை விவகாரம் பாதுகாப்பு சபையில் எடுக்கப்படுவதை ஏன் இந்த நாடுகள் தடுக்கின்றன பாதுகாப்பு சபையில் இலங்கை விவாகரம் ஆராயப்படால் எவ்வாறான விளைவுகள் ஏற்படும் என்ற கேள்விக்கான விடை இனி வரும் நாட்களில் கிடைத்து விடும்.

விடுதலைப் புலிகள் மக்களை கேடயமாக்கி தங்களை பாதுகாக்க வேண்டிய நிலையில் இல்லை என்பது தான் உண்மை.

ஆனால் அது இராணுவ நலன் சாராத இராஜதந்திர நலன் சார்ந்த விடயம் என்பது இப்போது தான் மெல்ல மெல்ல வெளிப்படுகின்றது.

உண்மையில் வன்னியின் பூகோளவியல் அறிவு படைத்தவர்களுக்கும் புலிகளின் ஆளுமைகள் பற்றி அறிந்தவர்களுக்கும் புலிகளின் நகர்வுகள் எவ்வாறானவை என்பது புரிந்திருக்கும்.

மகிந்த ராஜபக்ச என்ற தீவிர சிங்களவாத போர்க்குணம் படைத்த ஒருவரை ஜனாதிபதியாக்கியது முதல் அவர்களை வலிந்து போருக்கு அழைத்து தமது கட்டுப்பாட்டு பகுதிகள் அனைத்தையும் இழந்தது விடுதலைப் புலிகளின் மூடத்தனம் என்று கருதுகின்றவர்களுக்கான பதில் விரைவில் கிடைக்கும் என்று நம்பலாம்

இப்படியெல்லாம் நடைபெறும் என்று விடுதலைப் புலிகளின் தலைவர் கருதியிருக்கமாட்டார் இலங்கை இராணுவத்தை தோற்கடிக்கும் எண்ணத்தில் தான் அவர் வலிந்த போரை ஆரம்பித்தார் என்று கூறிகின்றவர்கள் விடுதலைப் புலிகளின் போக்கை சரிவர கவனிக்க தவறியவர்களாகவே கொள்ளப்பட வேண்டியவர்கள்.

சிறு குழுவாக தொடங்கிய விடுதலைப் புலிகளை முப்படைகளும் கொண்ட மாபெரும் போராட்ட இயக்கமாக வளர்த்த பிரபாகரன் சிறுபிள்ளை தனமாக சிந்தித்து தனது இத்தனை வருடகால போரட்டத்தை மகிந்தவிடம் தாரை வார்ப்பார் என்று எவரும் நம்பினால் ஐயோ பாவம் என்பதை தவிர வேறென்ன செய்ய.

இந்த போர் விடுதலைப் புலிகளுக்கு இராணுவ ரீதியாக பின்னடைவுகளை ஏற்படுத்தினாலும் அவர்களின் கொள்கைக்கு மிகப்பெரும் வலுவை சேர்த்துக் கொடுத்துள்ளது அந்த பலம் என்பது அவர்கள் இதுவரை பெற்ற இராணுவ வெற்றிகளை விடவும் உயர்வானது என்பது தான் உண்மை.

இப்போது வன்னியில் ஏறத்தாள இரண்டு இலட்சம் பேர் வரையான மக்கள் இருக்கின்றார்கள் ஆனால் அரசாங்கம் அவர்களின் எண்ணிக்கை 15000 என்றே கூறி வருகின்றது அப்படியானால் அங்கு எதிர்காலத்தில் நடத்தப்படும் தாக்குதலில் 15000 பேர் மட்டமே மீட்கப்படுவார்கள் ஏனையவர்கள் என்ன ஆவர்கள் என்பதற்கு பதில் அண்மையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவால் தெரிவிக்கப்பட்டு விட்டது.

சர்வதேச ஊடகவியலாளர்கள் மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் மத்தியில் பாதுகாப்பு வலயம் மீதான தமது தாக்குதல் நடவடிக்கை குறித்து கோட்டபாய விளக்கமளித்துக் கொண்டிருந்த போது பெருமளவு மக்கள் வாழும் ஒரு சிறிய பகுதி மீது தாக்குதல் நடத்தி அந்த மக்களை மீட்பதற்கு எவ்வாறு நீங்கள் துணிந்தீர்கள் என்று ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.அதற்கு பதிலளித்த கோட்பாய ரஸ்யாவில் பேஸ்லான் பாடசாலையில் தீவிரவாதிகளால் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த மக்கள் மீட்ட நடவடிக்கையினை தான் முன்னுதாரணமாக கொண்டதாக கூறினார்.

2004ம் ஆண்டு ரஸ்ய படைகள் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையில் பணயக்கைதிகளில் அரைவாசிப் பேர் உயிரிழந்தனர் இவர்களில் பெருளமவானவர்கள் சிறுவர்கள்.சர்வதேச அளவில் கடும் கண்டனங்களை ஏற்படுத்திய அந்த நடவடிக்கைக்கு ரஸ்யா அரசாங்கம் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியிருந்தது.

அவ்வாறான நடவடிக்கையினையே தான் மேற்கொள்வதாக கூறியதன் மூலம் பாதுகாப்பு வலய பகுதி மக்களில் பலர் கொல்லப்படுவார்கள் என்பதை கோட்டபாய ராஜபக்ச சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

ஆந்த சந்திப்பில் கலந்து கொண்ட எந்த ஒரு நாட்டினதும் இராஜதந்திரியாலும் அவரது இந்த கருத்தினையும் நிலைப்பாட்டினையும் வெளிப்படுத்த முடியாமல் போனது வருத்தத்திற்குரியது.

எனினும் ரஸ்யா மேற்கொண்ட மீட்பு நடவடிக்கைகள் குறித்து சர்வதேசத்திற்கு அறிவிப்பதற்கும் அங்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து அறிக்கை இடவும் ஊடகவியலாளர்களும் மனிதாபிமான பணியாளர்களும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்

ஆனால் வன்னியில் நிலைமைய வேறுவிதமானது அங்கு எத்தனை பேர் வாழ்கின்றார்கள் எத்தனை பேர் சாகின்றார்கள் என்பதை கூறுவதற்கு எவரமே இல்லை.

போர் பகுதிகளில் கடமையாற்ற வேண்டிய மனிதாபிமான அமைப்பான சர்வதே செஞ்சிலுவைச் சங்கமே தனது கோட்பாடுகளை இலங்கை அரசின் காலடியில் போட்டு விட்ட சரணாகதி அடைந்து கிடக்கின்றது.

ஆக மொதத்தில் மிகப்பெரிய மனிதப் பேரவலம் ஏற்படுதவற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்,சர்வதேசத்தை திசை திருப்ப சில சில்மிசங்களை இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது அதில் முக்கியமாக ஐநாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இலங்கையின் தூதுக்குழு.

அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா ரிசாத் பதியுதீன் என வன்னி மக்களுடன் தொடர்பான சிறுபான்மையின அரச பிரதிநிதிகள் இவர்கள் ஐநாவின் செயலாளருக்கு தெரியப்படுத்தும் நிலவரத்தை அவர் அப்படியே ஏற்றுக் கொள்ளவாரா என்பதற்கு அப்பால் எதோ ஒரு சிறு தாக்கத்தை அவர்களால் ஏற்படுத்த முடியும் என்பது உண்மை தான்

ஆக அரசாங்கம் தனது இறுதி நடவடிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றது திகதி குறிப்பது மட்டும் தான் மிச்சம் என்கின்றது படைத்தரப்பு பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் புலிகளின் இராஜதந்திரிமா அரசின் இராஜதந்திரிமா வெற்றி பெறப் போகின்றது என்பதை.

எதுவாக இருந்தாலும் அது அப்பாவி தமிழர்களின் உயிரற்ற உடலங்களின் மீதே நடைபெறும் என்பது மட்டும் மறுக்க முடியாத நிஜம்.

இதனை தடுப்பதற்கும் தமிழர்களின் விடுதலை மூச்சை தக்கவைப்பதற்குமான பலம் இப்போது பலம் பெயர் தமிழர்களின் தொடர் போராட்டங்களிலேயே தங்கியுள்ளது.

வலுப்பெறும் தமிழர் போராட்டம் மேற்கலக கதவுகை தட்டடி திறக்கும் அவை தமத போக்கை மாற்றும் நிலை ஏற்படும் அப்பபோது உலக தமிழர்களின் போராட்டங்களுக்கான தீர்வு தமிழீழ தனியரசாக மலரும் என்பது உறுதி.
நன்றி பதிவு .

Friday, April 24, 2009

இறுதி அழிவுத்தாக்குதளுக்கு இராணுவம்...

23/04/2009, 15:40 [ வன்னிச் செய்தியாளர் செந்தமிழ்]
இன்றோ, நாளையோ பெரும் தாக்குதலை படையினர் நடத்தலாம்?

சிறீலங்காப் படையினர் மிகப்பெரிய தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர் என வன்னிச் செய்திகள் தெரிவிக்கின்றன. படை நடவடிக்கையினால் வன்னியில் பெருந் தொகையில் மக்கள் கொல்லப்படும் அச்சம் மேலோங்கியிருப்பதாகவும் அறிய முடிகிறது.

இப் படை நடவடிக்கைகளுக்கான பின்தள நகர்வுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன. அத்துடன் முள்ளிவாய்கால் கடற்பரப்பில் சிறீலங்காக் கடற்படையினரின் டோறா மற்றும் கூவர் பீரங்கிப் படகுகள் தரித்து நிறுத்தப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையில் சிறீலங்கா விவகாரம் விவாதிக்கப்படுவதற்கு முன்னர் இந்த வார இறுதிக்குள் பெரும் தாக்குதல்களை நடத்தி விடுதலைப் புலிகளிடம் இருக்கும் நிலப்பரப்புக்களை ஆக்கிரமிக்கவே சிறீலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.